மனிதம் வாழ்கிறது
- பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்...
- *300-ரூபாய் தாங்க....
- *200-ரூபாய்க்கு வருமா?
- *சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
- சரி 250-ரூபாய் கொடுங்க...
- ஆட்டோ புறப்பட்டது....
- *அண்ணே இந்த வழியா போனா
- நீங்க டிபன் எங்கே சாப்பிடுவீங்க...?
- *ரோட்டுக்கடைதான் சார்...
- *அப்ப நீங்க சாப்பிடும் கடையிலேயே
- வண்டியை நிறுத்துங்க, நாம ரெண்டு
- பேருமே டிபன் சாப்பிட்டுவிடலாம்
- ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டி கிட்ட ஆட்டோ நின்றது....
- ஒரு நடுத்தர வயது அம்மா, அவரது நெற்றி மற்றும் தோற்றம்,அவர் துணை யற்றவர் என சொல்லியது....
- *வாங்க... இங்கதான் சார், வயித்துக்கு
- ஒண்ணும் பண்ணாது
- *இட்லி, தோசை என சாப்பிட்டோம்.
- *எவ்ளோம்மா?
- *60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க
- 100-ரூபாய் கொடுத்தேன்...
- மீதி சில்லரையை துட்டுடப்பாவில்
- பொருக்கியதுஅந்த அம்மா...
- *இன்னக்கி வியாபாரம் டல் சார் அதான்
- சில்லரை கஷ்டம்னாங்க...
- *சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
- இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
- வருவேன்... அப்போ வாங்கிக்கிறேன்
- என்று கூறிவிட்டு புறப்பட்டனர்...
- ஆட்டோ டிரைவர், "சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு போறீங்க... நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மா கிட்ட விட்டுட்டு போறீங்களே?"
- அதுக்கு அந்த பயணி, "இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்,அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம் இல்லையா? எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும்பா"
- நலச்சங்கம் அமைப்பது,வசூல்செய்வது,
- அதன்மூலம் பொதுசேவை செய்வது,
- புண்ணிய தலங்கள் செல்வது,
- நன்கொடை கொடுப்பது, உண்டியல்
- போடுவது என... இப்படித்தான்
- புண்ணியம் தேடவேண்டும் என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.
- ஆட்டோ வீடு வந்து சேந்தது...
- *இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
- 250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.
- *200-ரூபாய் போதும்
- *என்னாச்சுப்பா?
- *அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
- நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
- செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
- புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.
- *ஒரு கணம் மூச்சு நின்றது.....
- *நான் போட்ட புண்ணிய கணக்கை
- விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
- புண்ணிய கணக்கு !!!.
- *உதவியை உதவி என அறியாமலே
- செய்துவிட்டு கடந்து விடுங்கள்...
- புண்ணியம் நம்மை தேடி வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக