🌹 WELCOME TO CREATIVE MIND"🌹

Welcome to My CREATIVE MIND BlOG

Discover insightful articles, tips, and stories. Stay tuned for amazing content!

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

மனிதம் வாழ்கிறது

  •  


மனிதம் வாழ்கிறது 




  • பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்...
  • *300-ரூபாய் தாங்க....
  • *200-ரூபாய்க்கு வருமா? 
  • *சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
  •   சரி 250-ரூபாய் கொடுங்க...

  • ஆட்டோ புறப்பட்டது....

  • *அண்ணே இந்த வழியா போனா
  •  நீங்க டிபன் எங்கே சாப்பிடுவீங்க...?
  • *ரோட்டுக்கடைதான் சார்... 
  • *அப்ப நீங்க சாப்பிடும் கடையிலேயே
  •  வண்டியை நிறுத்துங்க, நாம ரெண்டு
  •  பேருமே டிபன் சாப்பிட்டுவிடலாம்

  • ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டி கிட்ட ஆட்டோ நின்றது....
  • ஒரு நடுத்தர வயது அம்மா, அவரது நெற்றி மற்றும் தோற்றம்,அவர் துணை யற்றவர் என சொல்லியது.... 

  • *வாங்க... இங்கதான் சார், வயித்துக்கு
  •  ஒண்ணும் பண்ணாது
  • *இட்லி, தோசை என சாப்பிட்டோம்.
  • *எவ்ளோம்மா?
  • *60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க
  •  100-ரூபாய் கொடுத்தேன்...
  •  மீதி சில்லரையை துட்டுடப்பாவில்
  •  பொருக்கியதுஅந்த அம்மா...
  • *இன்னக்கி வியாபாரம் டல் சார் அதான்
  •  சில்லரை கஷ்டம்னாங்க...
  • *சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
  •  இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
  •  வருவேன்... அப்போ வாங்கிக்கிறேன்
  •  என்று கூறிவிட்டு புறப்பட்டனர்...

  • ஆட்டோ டிரைவர், "சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு போறீங்க... நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மா கிட்ட விட்டுட்டு போறீங்களே?"


  • அதுக்கு அந்த பயணி, "இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்,அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம் இல்லையா? எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும்பா" 

  • நலச்சங்கம் அமைப்பது,வசூல்செய்வது,
  • அதன்மூலம் பொதுசேவை செய்வது,
  • புண்ணிய தலங்கள் செல்வது,
  • நன்கொடை கொடுப்பது, உண்டியல்
  • போடுவது என... இப்படித்தான்
  • புண்ணியம் தேடவேண்டும் என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.

  • ஆட்டோ வீடு வந்து சேந்தது...
  • *இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
  •  250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.
  • *200-ரூபாய் போதும்
  • *என்னாச்சுப்பா?
  • *அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
  •  நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
  •  செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
  •  புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.
  • *ஒரு கணம் மூச்சு நின்றது.....

  • *நான் போட்ட புண்ணிய கணக்கை
  •  விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
  •  புண்ணிய கணக்கு !!!.
  • *உதவியை உதவி என அறியாமலே
  •  செய்துவிட்டு கடந்து  விடுங்கள்...
  •  புண்ணியம் நம்மை தேடி வரும்.

கருத்துகள் இல்லை: